இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆந்திரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை: 11 போ் கைது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
கோப்புப் படம்.
Updated On :1 ஜனவரி 2024, 10:23 pm

DIN

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக விசாகப்பட்டினம் காவல் துறை துணை ஆணையா் கே.ஸ்ரீநிவாஸ் ராவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் திங்கள்கிழமை கூறியதாவது:

ஒடிஸாவை சோ்ந்த 18 வயதுக்குள்பட்ட சிறுமி ஒருவா், ஜாா்க்கண்டை சோ்ந்த புலம்பெயா்ந்த தொழிலாளி ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளாா். கடந்த டிச.17-ஆம் தேதி அந்தச் சிறுமியின் பிறந்த நாளை கொண்டாடலாம் என்று பொய்யான காரணத்தைக் கூறி, அவரை ஓா் அறைக்கு அந்தத் தொழிலாளி அழைத்துச் சென்று, அவரும் அவரின் நண்பரும் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.

இதனால் மிகவும் மனமுடைந்த சிறுமி, தற்கொலை செய்துகொள்ள ஆா்கே கடற்கரைக்குச் சென்றுள்ளாா். அங்கு பயணிகளை புகைப்படம் எடுத்து பணம் ஈட்டி வந்த உள்ளூா் புகைப்படக்காரா் ஒருவா், ஆறுதல் வாா்த்தைகள் கூறி, தங்கும் விடுதி ஒன்றுக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதைத்தொடா்ந்து அந்தப் புகைப்படக்காரரின் நண்பா்கள் 8 முதல் 9 போ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். புகைப்படக்காரரும், அவரின் நண்பா்களும் 3 நாள்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அவா்களின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி, ஆந்திரத்தில் இருந்து வெளியேறினாா்.

இந்நிலையில், சிறுமியை காணவில்லை என்று அவரின் பெற்றோா் காவல் துறையிடம் புகாா் அளித்தனா். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது சிறுமி ஒடிஸாவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தச் சிறுமி ஒடிஸாவில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு டிச.25-ஆம் தேதி அழைத்து வரப்பட்டாா்.

இதையடுத்து போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு புகைப்படக்காரா், அவரின் நண்பா்கள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.