அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்?

நாட்டில் ஜனவரி 4ஆம் தேதி நிலவரப்படி, கரோனா பாதித்திருப்பவர்களின் எண்ணிக்கை 4,423 ஆக அதிகரித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜனவரி 2024, 12:29 pm

DIN


நாட்டில் ஜனவரி 4ஆம் தேதி நிலவரப்படி, கரோனா பாதித்திருப்பவர்களின் எண்ணிக்கை 4,423 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. 

இது குறித்து சுகாதாரத் துறை கூறுவது என்னவென்றால், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் 5 நாள்களுக்கு தங்களை தனிப்படுத்திக் கொள்ளவேண்டும். வீட்டில் இருக்கும் முதியவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஜெஎன் 1 வகை கரோனா திரிபு பரவத் தொடங்கியதிலிருந்து, கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே, வயதானவர்கள் மற்றும் இணை நோய் இருப்பவர்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாள்கள் பண்டிகைக் காலமாக இருப்பதால், அடுத்த 15 நாள்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது.

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களும், கரோனா பாதிப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையை கண்காணிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்தவர்களில் 5 பேர் பலியானதாகவும் புள்ளிவிவர தெரிவிக்கிறது.

இதுவரை பரவிய கரோனா தொற்றுகளில் பிஏ.5 வகை திரிபு உயிர்க்கொல்லியாக இருப்பதாகவும், கரோனா பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களில் மற்ற நோயாளிகளைக் காட்டிலும் ஒமைக்ரான் வகை பிஏ.5 வகை திரிபு பாதித்தவர்களின் இறப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.