மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள்!

ஜம்மு காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள வூலார் ஏரிக்கு வருகை தரும் பறவைகள் வேட்டையாடப் படுவதை கண்காணிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2024, 5:00 pm IST

ஜம்மு காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள வூலார் ஏரிக்கு வருகை தரும் பறவைகள் வேட்டையாடப் படுவதை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

வூலார் ஏரி ஆசியாவின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். இது பாரமுல்லா மற்றும் பந்திபூர் ஆகிய காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் சுமார் 200 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. 

காஷ்மீரின் 60 சதவீத மீன் உற்பத்தி இந்த ஏரியில் இருந்து பெறப்படுகிறது. மேலும் பல லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் இடம்பெயரும் பறவைகளுக்கு இருப்பிடமாக வூலார் ஏரி திகழ்கிறது.

சமீப ஆண்டுகளாக இப்பகுதியில் பறவைகளை வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. இது பெரும் எண்ணிக்கையிலான பறவைகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

உள்ளூர் நிர்வாகம் பறவைகளை வேட்டையாடுதலுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. சமீபகாலமாக இதுதொடர்பாக பலரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் பறவைகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. எனவே இதனைத் தடுப்பதற்காக 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏரியைச் சுற்றி முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

வூலார் ஏரி பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் குழு நிர்வாகி இர்ஃபான் ரசூல் கூறுகையில், “வூலார் ஏரி திறந்தவெளிப் பகுதி. எனவே இப்பகுதியைக் கண்காணிப்பதற்கு கேமராக்கள் சிறந்த வழியாகும். இதனை கைப்பேசி மூலம் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் வேட்டையாடுதலைக் கண்காணிப்பதோடு, ஆக்கிரமிப்புகளையும் கண்காணிக்க முடியும்.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.