குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மகனைக் கொன்ற வழக்கு: சுசனாவுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு!

தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் கூறப்படும் சுசனா சேத்தின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து கோவா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2024, 6:18 pm IST

தனது சொந்த மகனையே கொன்றதாகக் கூறப்படும் சுசனா சேத்தின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து கோவா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி சுசனா சேத் (39) என்பவர் தனது நான்கு வயது மகனைக் கொன்று, அந்த உடலை பையில் அடைத்து டாக்ஸியில் கொண்டு சென்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை ஆறு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து 6 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த சுசனா சேத், இன்று (திங்கள்கிழமை) கோவா குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை இன்னும் முடிவடையாததால், அவரது காவலை நீட்டிக்குமாறு போலீசார் கோரினர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சுசனா சேத் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே அவரை விசாரிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்பதாலும், அவரது டிஎன்ஏ மாதிரியை சோதிப்பது போன்ற பிற பணிகளையும் செய்ய வேண்டியுள்ளதாலும் அவரது காவலை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். 

அதையடுத்து சுசனா சேத்தின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து கோவா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சுசனாவின் கணவர் வெங்கட் ராமனின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் பணி ஏற்கனவே முடிந்துவிட்டதாக காவல்துறையினர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.