மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

125 முறை பத்திரப்பதிவு செய்யப்பட்ட 6 குடியிருப்புகள்: இப்படியும் ஒரு முறைகேடு

வங்கி மோசடிப் பிரிவினர் நடத்திய விசாரணையில், 6 குடியிருப்புகளை 125 முறை பத்திரப்பதிவு செய்து, வீட்டுக் கடன் மோசடி செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

News image
Updated On :18 ஜனவரி 2024, 12:04 pm

DIN


கொல்கத்தா: துப்பறியும் துறையின் வங்கி மோசடிப் பிரிவினர் நடத்திய விசாரணையில், 6 குடியிருப்புகளை 125 முறை பத்திரப்பதிவு செய்து, வீட்டுக் கடன் மோசடி செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வழக்கில், ஒரு தனியார் வங்கியில் வீட்டுக்கடன் பெற்று ரூ.1.2 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குடியிருப்பின் உரிமையாளர், அந்த வீட்டை விற்பவர் போலவும், சிலர், அந்த வீட்டை வாங்குவது போலவும் நடித்து, போலியான ஆவணங்களைக் காட்டி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று இதர 6 தனியார் வங்கிகளில் நடந்த மோசடிகளின் மூலம் சுமார் ரூ.10 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வீடுகளைக் கட்டிய உரிமையாளர் அதனை பல்வேறு தனியார் வங்கிகளில் விற்பனை செய்வது போல மோசடி செய்துள்ளதும், 6 குடியிருப்புகள் 125 முறை பத்திரப்பதிவு செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு இறுதிவரை நடந்துள்ளது. இதில் தொடர்புடைய 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு வங்கிக் கடன் கொடுத்திருப்பதாக, சில தனியார் வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.