மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் வன்முறையை மட்டுமே பரப்பி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் சிலிகுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பேசிய ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, “குறுகிய கால ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிவீர் திட்டத்தை அறிமுகப்படுத்தி, ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு தொண்டாற்ற விரும்பிய இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைத்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் வெறுப்பையும், வன்முறையையும் மட்டுமே பரப்பி வருகிறது. அதனால் எந்தப் பயனும் இல்லை. வெறுப்பைப் பரப்புவதற்குப் பதிலாக, நம் இளைஞர்களுக்கு அன்பையும், நீதியையும் பரப்புவதற்குதான் நாம் உழைக்க வேண்டும்.
ஏழை மக்கள் மற்றும் இளைஞர்களுக்காக செயல்படுவதற்கு மாறாக, மத்திய பாஜக அரசு ஒருசில பெருநிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது." என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்!

ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து!

நீதித் துறை வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நேரத்தில் 4 பெண் தலைமை நீதிபதிகள்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



