விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்!

பிகாரில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விவசாயிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.

News image

விவசாயிகளுடன் ராகுல் காந்தி பேச்சு

Updated On :30 ஜனவரி 2024, 6:15 am

DIN

பிகாரில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விவசாயிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் நேற்று காலை பிகார் மாநிலத்துக்குள் நுழைந்தது.

பிகார் மாநிலத்தில் இரண்டாவது நாளாக அராரியா மாவட்டத்தில் இருந்து பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

Story image

தொடர்ந்து, பூர்ணியா மாவட்டத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் அமர்ந்து, அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.