நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்றனர்.
பிரதமர் உரையின் போது நேற்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மக்களவையில் பிரதமர் மோடி குறித்தும், அக்னிவீர், ஆர்எஸ்எஸ், பாஜக குறித்தும் ராகுல் காந்தி பேசிய சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









