இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காங்கிரஸின் மகிழ்ச்சியை புரிந்து கொள்ள முடியவில்லை: பிரதமர் மோடி

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு மோடி பதிலுரை.

News image
Updated On :3 ஜூலை 2024, 8:14 am

DIN

தேர்தலில் தோற்ற பிறகும் காங்கிரஸ் மகிழ்ச்சியாக இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பிரதமர் மோடி புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார்.

அப்போது, காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:

“இந்த தேர்தல் முடிவால் மூலதனச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது மட்டுமின்றி, உலகம் முழுவதும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. இதற்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியினரும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மகிழ்ச்சிக்கு காரணம் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த மகிழ்ச்சி ஹாட்ரிக் தோல்விக்கா? 90 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றதற்கா? அவர்களின் மற்றொரு பிரசாரமும் தோல்வி அடைந்ததற்காகவா?

கார்கே முழு ஆற்றலுடன் இருப்பதைப் பார்த்தேன். அவர் தனது கட்சிக்கு நிறைய சேவை செய்தார். ஏனென்றால், யாரோ ஒருவர் மீது சுமத்தப்பட வேண்டிய தோல்வி பழியை அவர் காப்பாற்றினார். சுவர் போல் நின்று கொண்டுள்ளார். இதுபோன்ற சூழல்களையெல்லாம் தலித் அல்லது பிற்படுத்தப்பட்டோர் தாங்க வேண்டும், அந்த குடும்பம் மட்டும் பாதுகாப்பாக இருக்கும்.

மக்களவைத் தலைவர் விவகாரத்திலும் தோற்கடிக்கப்படுவார் என்று தெரிந்தும் ஒரு தலித்தை முன்னிறுத்தினர். குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தலின் போதும் சுஷில் குமார் ஷிண்டேவை நிறுத்தினார்கள்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கு எதிரான மனப்பான்மை காங்கிரஸுக்கு உண்டு. அதன் காரணமாகவே முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவமானப்படுத்தினார்கள். நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவரையும் விட்டுவிடவில்லை, யாரும் பயன்படுத்த வார்த்தைகளை கூறினார்கள்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.