விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

ஹாத்ரஸ் சம்பவம்: தாய் பலி; 5 வயது சிறுவனைத் தேடும் குடும்பம்!

ஹாத்ரஸ் சம்பவத்தில், மனைவியை இழந்துவிட்டு தனது 5 வயது குழந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறார் ஒருவர்.

News image

ஹாத்ரஸ் சம்பவத்தின் துக்க வீட்டில்... - பிடிஐ

Updated On :3 ஜூலை 2024, 6:05 am

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில், நாட்டையே உலுக்கிய கூட்ட நெரிசல் உயிரிழப்பில், தனது சகோதரனின் மனைவியை இழந்துவிட்டு, அவர்களது 5 வயதுக் குழந்தையைத் தேடிக்கொண்டிருக்கும் ராஜ்குமாரி தேவி, இதுபோன்ற விதியை ஏழைகள்தான் சந்திப்பார்கள், பணக்காரர்கள் அல்ல என்று கூறி கதறுகிறார்.

ஆம்புலன்ஸில், தனது சகோதரனின் மனைவி ரூபியின் உடலை வைத்துக்கொண்டு, அவரது 5 வயது குழந்தை எங்கிருக்கிறார் என்று தெரியாமல், ஒட்டுமொத்த குடும்பமும் அங்குமிங்கும் தேடி அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்து கதறி அழுதுகொண்டிருக்கிறார்.

தனது கணவருடன் உன்னாவ் மாவட்டத்திலிருந்து, ஆன்மிக சொற்பொழிவுக்கு வந்தவர் ராஜ்குமாரி. இவர் தனது சகோதரன், அவரது மனைவி மற்றும் 5 வயது குழந்தையுடன் சொற்பொழிவில் கலந்துகொண்டிருந்தார். ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது, ரூபி பலியான நிலையில், 5 வயது குழந்தை எங்கிருக்கிறான் என்று தெரியாமல் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார் ராஜ்குமாரி.

தங்களது வீட்டிலிருந்து 400 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தற்போது ஹாத்ரஸ் புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார்கள்.

அரசுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, இப்போது என்ன சொல்வது? எதையும் சொல்வதற்கில்லை. எங்களைப் போன்ற ஏழைகள் மட்டுமே இதுபோன்றதொரு விதியைச் சந்திக்கிறார்கள். பணக்காரர்கள் இல்லை என்று கூறி கதறுகிறார்.

ராஜகுமாரி மற்றும் சகோதரன் குடும்பம் உள்பட 60 பேர் இந்த பாபாவின் சத்சங்கத்தில் பங்கேற்க வந்துள்ளார்கள். இரண்டு பேருந்துகளில் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து புறப்பட்டு வந்துள்ளனர்.

தனது மகளின் உடலுக்கு அருகே அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் சேத்தி லால் என்ற முதியவர், கட்டிக்கொடுத்த மகளையும் என்னுடன் அழைத்து வந்தேன். இன்று எனது மகள் சடலமாகிவிட்டார், அவரது கணவருக்கு என்ன சொல்வேன் என்று தெரியாமல் கலங்கி நிற்பதாகக் கூறுகிறார்.

இவ்வளவு கூட்டம் சேரும் என்று ஏற்பாட்டாளர்களும் எதிர்பார்க்கவில்லை, கூட்டத்துக்கு வந்திருந்தவர்களும் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.