புது தில்லி: மத்திய அரசால், ராணுவத்துக்குக் கொண்டுவரப்பட்ட அக்னிவீரர் திட்டம் அறிமுகமாகி இன்னமும் ஓராண்டு நிறைவடைவதற்குள் கிட்டத்தட்ட 20 அக்னிவீரர்கள் மரணமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்னிவீரர் திட்டத்தில் முதல் குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராணுவத்தில் இணைக்கப்பட்டனர்.
இந்திய ராணுவத்தில் இதுவரை 18 வீரர்கள் மரணமடைந்திருப்பதாகவும், அண்மையில் இந்திய விமானப் படையில் சேர்ந்த அக்னிவீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவரையும் சேர்த்து இந்த பலி எண்ணிக்கை உள்ளது.
இந்திய விமானப் படையிலிருந்து உறுதி செய்யப்பட்ட தகவலில், ஸ்ரீகாந்த் குமார் சௌதரி (22), ஆக்ராவில் உள்ள விமானப்படை நிலையத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க விசாரணை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், மிகவும் விநோதமான சம்பவம் என்னவென்றால், ஆக்னிவீரர்களில் முதல் மரணமும் தற்கொலையாகவே அமைந்திருப்பதுதான்.
முன்னதாகக் கிடைத்த தகவலில், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி அக்னிவீரர் அம்ரித்பால் சிங் (19) ஜம்முவில் பணியில் இருந்த போது உயிரிழந்தார்.அவரது இறுதிச் சடங்குக்கு ராணுவ மரியாதை வழங்கப்படவில்லை. இந்த சம்பவம் அந்த நேரத்தில் ராணுவத்துக்கு பல விமரிசனங்களைப் பெற்றுத்தந்திருந்தது. பிறகுதான், அம்ரித்பால் சிங் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதனால்தான் அவரது இறுதிச் சடங்குக்கு ராணுவ மரியாதை வழங்கப்படவில்லை என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சியாச்சின் அருகே பணியில் இருந்தபோது அக்சய் லஷ்மன் என்ற அக்னிவீரர் பலியானார். அப்போதுதான், அவரது குடும்பத்துக்கு பணப்பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அண்மையில் அக்னிவீரர் அஜய் சிங் மரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் எழுந்தது. ஆனால், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். கடந்த ஜனவரி மாதம், ஜம்மு-காஷ்மீரில் ரஜௌரி பகுதியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் இவர் மரணமடைந்தார்.
இந்த நிலையில்தான் மரணமடையும் அக்னிவீரர்கள் குடும்பத்துக்கு மத்திய அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குகிறது என்று ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார்.
இந்திய ராணுவமும் எக்ஸ் வலைத்தளம் மூலம் இதற்கு விளக்கம் அளிக்கையில், மொத்த இழப்பீடு தொகை ரூ.1.65 கோடி, அதில் ஏற்கனவே ரூ.98.39 லட்சம் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்திருந்தது.
முதற்கட்டமாக, காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சம் பிப்ரவரி மாதமும், அரசு காப்பீடுத் தொகை ரூ.48 லட்சம் ஜூன் மாதமும் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில்லாமல், பஞ்சாப் மாநில அரசு, அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியிருந்தது.
அக்னிவீரர் அஜய் சிங், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டது. அவரது குடும்பத்துக்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதர சலுகைத் தொகையான ரூ.67 லட்சம், காவல்துறை விசாரணைக்குப் பிறகு வழங்கப்படும். அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.1.65 கோடி வழங்கப்படுகிறது என்று எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அக்னிவீரர் திட்டத்தின் கீழ், 17.5 வயது முதல் 21 வயதுவரையிலான இளைஞர்கள் சேர்க்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றுவார்கள். அதன்பிறகு, இவர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியப் பலன்களோ, மருத்துவப் பலன்களோ கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மீது நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

உடல் உறுப்புகள் மாயமானது எப்படி? அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை! இந்திய மாலுமியின் மனைவி

2016-ஆம் ஆண்டு வரதட்சிணை மரண வழக்கு: கணவா் உள்பட மூவா் விடுவிப்பு

பணியின்போது இறந்த நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நல நிதி
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!




