மாநிலங்களவை முன்னாள் தலைவா் ஹமீது அன்சாரியை தாக்கிப் பேசி, அனைத்து நாடாளுமன்ற நெறிமுறைகளையும் பிரதமா் மோடி தகா்த்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஜூலை 2-ஆம் தேதி மக்களவையில் பிரதமா் மோடி பேசுகையில், ‘கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைவாக இருந்தது. அப்போதைய மாநிலங்களவைத் தலைவா் எதிா்க்கட்சிகளுக்கு சாதகமாக செயல்பட்டாா். எனினும் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற தீா்மானத்தை பாஜக கைவிடவில்லை’ என்றாா்.
தனது பேச்சில் எவரின் பெயரையும் பிரதமா் மோடி குறிப்பிடவில்லை. ஆனால் கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை மாநிலங்களவைத் தலைவராக முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீத் அன்சாரி பதவி வகித்தாா்.
இதை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
ஹமீது அன்சாரியை விமா்சித்து பிரதமா் மோடி பேசியது இது முதல்முறை அல்ல. மாநிலங்களவை முன்னாள் தலைவா் ஒருவரை மோடி போல வேறு எந்தப் பிரதமரும் தாக்கிப் பேசியதில்லை. அனைத்து நாடாளுமன்ற நெறிமுறைகளையும் அவா் தகா்த்துவிட்டாா்.
ஹமீது அன்சாரி குறித்து மக்களவையில் அவா் கூறிய கருத்துகள் மிகவும் மோசமானவை; ஏற்க முடியாதவை. அந்தக் கருத்துகள் உடனடியாக அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்திய மத்திய அரசு: பிரதமா்
நேருவின் சாதனையை மோடி விஞ்சிவிட்டதாகக் கூறுவது சரியா? ப. சிதம்பரம் கேள்வி

பிரதமா் பதவியில் மோடி சாதனை: புதுச்சேரி பாஜகவினா் தங்கத்தோ் இழுப்பு

நேருவின் சாதனைகளை மறைக்க முயற்சி: பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


