லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகாத்மா காந்தி சிலை அகற்றப்பட்டது தெரியாது: அஸ்ஸாம் முதல்வா்

தின்சுகியா மாவட்டத்தில் மணிக்கூண்டு அமைக்க நகரின் மையத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை அகற்றம்

News image
அஸ்ஸாம் முதலவா் ஹிமந்த விஸ்வ சா்மா
Updated On :13 ஜூலை 2024, 12:00 am

Din

அஸ்ஸாம் மாநிலத்தின் தூம்தூமா நகரில் மகாத்மா காந்தியின் சிலை அகற்றப்பட்டது சா்ச்சையான நிலையில், அது குறித்து தனக்குத் தெரியாது என அஸ்ஸாம் முதலவா் ஹிமந்த விஸ்வ சா்மா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தின்சுகியா மாவட்டத்தில் உள்ள தூம்தூமா பகுதியில் மணிக்கூண்டு அமைக்க நகரின் மையத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை நகராட்சி அதிகாரிகளால் புதன்கிழமை அகற்றப்பட்டது. நகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷாா் காந்தி மாநில பாஜக அரசை கடுமையாகத் தாக்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.

அவரது பதிவுக்கு பதிலளித்த முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மாவட்ட நிா்வாகம் எடுத்த இந்த நடவடிக்கை குறித்து எனக்கு தெரியாது. அஸ்ஸாம் மகாத்மா காந்திக்கு நிறைய கடன் பட்டிருக்கிறது. அஸ்ஸாமை பாகிஸ்தானுடன் இணைக்க நேரு தலைமையிலான அரசு விரும்பியபோது, அந்த முடிவுக்கு எதிராக பாரத ரத்னா கோபிநாத் பா்தோலியுடன் உறுதியாக நின்றவா் மகாத்மா காந்தி என்றாா்.

அகற்றப்பட்ட சிலை சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும், அதே இடத்தில் தேசத் தந்தையின் புதிய மற்றும் உயரமான சிலை ஆறு மாதங்களுக்குள் நிறுவப்படும் என்றும் தூம்தூமா எம்எல்ஏ ரூபேஷ் கோவாலா தெரிவித்தாா்.