6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நோயாளி கொல்லப்பட்டதால் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி காலவரையற்ற வேலைநிறுத்தம்

News image
கோப்புப் படம்
Updated On :15 ஜூலை 2024, 2:52 pm

DIN

தில்லி மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்து மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.

தில்லியைச் சேர்ந்த ரியாசுதீன் என்பவர் வயிற்றுநோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜூன் 23ஆம் தேதியில் தில்லி குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ரியாசுதீனுக்கு நேற்று (ஜூலை 14) சிகிச்சையளிக்கப்பட்டு இருக்கும்போது சிகிச்சை அறையில் நுழைந்த ஒருவர், மருத்துவர்கள் கண்முன்னே ரியாசுதீனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். ரியாசுதீனைக் கொன்றவர் குறித்த தகவல்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, ரியாசுதீன் மருத்துவமனையிலேயே கொல்லப்பட்ட சம்பவத்தினை அறிந்த மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். தில்லி நர்சிங் கூட்டமைப்பு மற்றும் பிற மருத்துவர் சங்கங்களின் ஆதரவுடன் இளநிலை மருத்துவர்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்குகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது, ``இதன் முன்னரே ஒருமுறை மருத்துவமனைகளில் பாதுகாப்புப் பணிகள் திறம்படச் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களுக்கு முழுப் பயிற்சியோ அளிக்கப்படவில்லை. '

மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த கோரிக்கைகளை தில்லி அரசு புறக்கணித்து வருகிறது. தற்போது மருத்துவமனையிலேயே கொலை நடந்துள்ளது. ஆகையால், மருத்துவமனையின் பாதுகாப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தொடரும்” என்று கூறியுள்ளனர்.

இருப்பினும், மருத்துவமனையில் அவசரகால நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சௌரத் பரத்வாஜ், அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.