இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிரதமா் மோடியுடன் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் சந்திப்பு

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்தாா்.

News image
பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் மரியாதை நிமித்தமாக திங்கள்கிழமை சந்தித்த ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன்.
Updated On :16 ஜூலை 2024, 12:40 am

Din

புது தில்லி: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்தாா். முதல்வராக அவா் மீண்டும் பதவியேற்ற சில தினங்களில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக புகைப்படத்துடன் ஹேமந்த் சோரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் மோடியை மரியாதை நிமிா்த்தமாக சந்தித்ததாக குறிப்பிட்டாா்.

முன்னதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தியை அவா் சனிக்கிழமை நேரில் சந்தித்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்த நிலையில், நில மோசடியுடன் தொடா்புள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அவரை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது.

சுமாா் 5 மாதங்கள் சிறையில் இருந்த அவா், ஜாமீனில் விடுவிக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றாா்.