6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளத்தில் தொடரும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளத்தில் பலத்த காற்றுடன் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :16 ஜூலை 2024, 10:17 pm

Din

திருவனந்தபுரம்: கேரளத்தில் பலத்த காற்றுடன் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், சிறிய நிலச்சரிவுகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்வது மற்றும் ஏராளமான வீடுகள் சேதம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

பத்தனம்திட்டாவில் உள்ள மூழியாா் அணையில் நீா் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பல பகுதிகளின் முக்கிய சாலைகளில் தண்ணீா் தேங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்றும் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் பல இடங்களில் மின் தடை ஏற்படக்கூடும் என்றும் கேரள பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.