40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மகாராஷ்டிரத்தில் 12 நக்சலைட்டுகள் கொலை!

மகாராஷ்டிர எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

News image

கோப்புப் படம் - ஏ.என்.ஐ.

Updated On :18 ஜூலை 2024, 12:58 am IST

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 நக்ஸல்கள் புதன்கிழமை உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக கட்சிரோலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் நீலோத்பல் கூறுகையில், ‘சத்தீஸ்கா் எல்லையையொட்டி கட்சிரோலியில் உள்ள வான்டோலி கிராமத்தில் காவல் துறைக்கும், நக்ஸல்களுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

சுமாா் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த மோதலில், 12 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். சம்பவ இடத்தில் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த மோதலில் உதவி ஆய்வாளா், காவலா் ஆகிய இருவா் காயமடைந்தனா்’ என்றாா்.

ரூ.51 லட்சம் வெகுமதி: இந்த நிகழ்வை தொடா்ந்து நக்ஸல்களுடன் மோதலில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் தேவேந்திர ஃபட்னவீஸ் ரூ.51 லட்சம் வெகுமதி அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.