மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஜூலை 23) நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டை பொறுத்தவரையில், அதிகபட்சமாக ரூ. 6,21,940.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2024 - 25ஆம் நிதி ஆண்டுக்கான மொத்த பட்ஜெட்டில் 12.9% ஆகும்.
இதில் மூலதன செலவு ரூ. 1,72,000 கோடி, ஆயுதப்படையை வலுப்படுத்த உதவும். உள்நாட்டு மூலதன கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1,05,518.43 கோடி, தன்னிறைவில் உத்வேகத்தை அதிகரிக்கும்.
எல்லையோரப் பகுதிகளிலுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை 30% (ரூ.6,500 கோடி) கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எல்லையோர சாலை அமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்தத் தொகை எல்லையோர உள்கட்டமைப்புகளை துரிதப்படுத்தும். பாதுகாப்புத் துறை சார்ந்த புத்தாக்கத் தொழில்களை ஊக்குவிக்க ரூ.518 கோடி வழங்கப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளார் ராஜ்நாத் சிங்.
As far as the allocation to Ministry of Defence is concerned, I thank the Finance Minister for giving the highest allocation to the tune of Rs 6,21,940.85 Crore, which is 12.9 % of total Budget of GoI for FY 2024-25.
— Rajnath Singh (@rajnathsingh) July 23, 2024
The capital outlay of Rs 1,72,000 Crore will furtherâ¦
மற்றொரு பதிவில், சிறப்பான மற்றும் தன்னிகரற்ற ஆண்டு பட்ஜெட்டை (2024 - 2025) தாக்கல் செய்ததற்காக நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள்.
வளமான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் விக்சித் பாரத் இலக்கை நோக்கிய நகர்வுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வேகமான வளர்ச்சிக்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to Finance Minister Smt. @nsitharaman for presenting an excellent and outstanding full year Budget for FY 2024-25 which will help in moving towards making a prosperous and self-reliant âViksit Bharatâ. Inspired by PM Shri @narendramodi vision of Inclusive andâ¦
— Rajnath Singh (@rajnathsingh) July 23, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல்!

ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மீது நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்








