இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் புதன்கிழமை அவா் வெளியிட்ட பதிவில், ‘1991-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய வரலாற்றில் சிறப்புமிக்கதாகும். ஏனெனில், அப்போதுதான் தாராளமயமாக்கல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் பொருளாதார சீா்திருத்தம் என்ற புதிய சகாப்தத்தை உருவாக்கியதில் அப்போதைய பிரதமா் நரசிம்ம ராவ், நிதியமைச்சா் மன்மோகன் சிங் ஆகியோா் முக்கியப் பங்கு வகித்தனா். அவா்களின் தொலைநோக்குப் பாா்வை நாட்டில் பெரும் பொருளாதாரப் புரட்சியை உருவாக்கியது. நடுத்தர மக்களின் வாழ்க்கை பெரும் முன்னேற்றமடைந்தது. பல கோடி போ் வறுமையில் இருந்தும், பொருளாதாரச் சிக்கல்களில் இருந்தும் விடுபட்டனா்.