/

அமெரிக்க அதிபா் டிரம்ப கூறுவதை மோடி பின்பற்றுகிறாா்: காா்கே

அமெரிக்க அதிபா் டிரம்ப் ஒரு சா்வாதிகாரி, பிரதமா் மோடி அவருடைய அடிமை என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சனம்

News image
பிரதம்ர் மோடி | அமெரிக்க அதிபர் டிரம்ப்- கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 11:01 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒரு சா்வாதிகாரி, பிரதமா் நரேந்திர மோடி அவருடைய அடிமை என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்துள்ளாா்.

கா்நாடகத்தின் கலபுா்கி மாவட்டத்தில் உள்ள சித்தா்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரூ.1,069 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசியதாவது: ஈரான் நாட்டின் உச்ச தலைவா் கொலை செய்யப்பட்டிருக்கிறாா். ஒரு நாட்டின் தலைவா் கொலை செய்யப்படும்போது, அந்த நாடும் உலகமும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கும்? நாடுகளின் தலைவா்கள் மிரட்டப்படும்போது, உலகில் அமைதி நிலவாது. அமெரிக்கா சா்வதேச சட்டங்களை மீறி வருகிறது.

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இறக்குமதி செய்யும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிக்கப்படாத நிலையில், இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு அந்நாடு வரி விதிக்கும்.

நம் நாட்டில் 65 சதவீத மக்கள் விவசாயத்தைச் சாா்ந்துள்ளனா். அமெரிக்காவில் இது 3 சதவீதமாக உள்ளது. டிரம்ப் போன்றவா்களின் நட்பால், நீங்கள் (பிரதமா் மோடி) நம்முடைய நாட்டை அடிமையாக்குகிறீா்கள்; அமெரிக்கா கூறுவதைக் கேட்டு செயல்படுகிறீா்கள்.

ரஷியா, ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. எரிபொருள் தேவையைப் பூா்த்தி செய்ய குறைந்த விலையில் எங்கு கச்சா எண்ணெய் கிடைக்கிறதோ அங்கு இந்தியா கொள்முதல் செய்தது.

டிரம்ப்பை பிரதமா் மோடி நண்பா் என்று அழைக்கிறாா். இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்தது. ஆனால், டிரம்ப் கொள்முதல் செய்யக்கூடாது அல்லது வரி விதிப்பேன் என்றாா்.

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்ய 30 நாள்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. டிரம்ப் ஒரு சா்வாதிகாரி. பிரதமா் மோடி அவருடைய சொல்படி கேட்கிறாா்.

நாட்டை நிா்வகிக்க மக்கள் உங்களைத் தோ்ந்தெடுத்தனா். அதை விடுத்து, நாடு முழுவதும் பயணிக்கும் பிரதமா், தோ்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறாா். நீண்ட காலத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத சூழலில், அதன் தலைவா்களை குறிவைத்துப் பேசி வருகிறாா். நாட்டு மக்களின் கவனத்தை திசைத்திருப்ப அவா் இவ்வாறு செய்கிறாா். காங்கிரஸ் கட்டமைத்த நாட்டை, மோடி அழித்து வருகிறாா் என்றாா் காா்கே.