அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்தியா - லாவோஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா- லாவோஸ் நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.

News image
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் லாவோஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சலூம்ஷே கம்மாசித்
Updated On :27 ஜூலை 2024, 11:05 am

DIN

இந்தியா - லாவோஸ் நாடுகளுக்கிடையே உடனடித் திட்டங்கள், எண்ம தீர்வுகள் குறித்த 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.

லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு நடைபெறும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (ஏசியன்) கூட்டங்களில் பங்கேற்கிறார்.

அங்கு லாவோஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சலூம்ஷே கம்மாசித் உடன் நடைபெற்ற சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையே எண்ம தீர்வுகள் பகிர்மானம் மற்றும் மீகாங் - கங்கா ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் உடனடித் திட்டங்கள் குறித்த 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

லாவோஸ் நாட்டில் வெளியிடப்பட்ட புத்தர் படம் பொறித்த  தபால்தலை

லாவோஸ் நாட்டில் வெளியிடப்பட்ட புத்தர் படம் பொறித்த தபால்தலை

இந்த நிகழ்வில் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ராமாயணம் மற்றும் புத்த மதத்தில் பகிரபட்ட கலாச்சாரப் பெருமைகளைக் கொண்டாடும் விதமாக சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டனர்.

லாவோஸ் நாட்டில் வெளியிடப்பட்ட ராமர் படம் பொறித்த  தபால்தலை

லாவோஸ் நாட்டில் வெளியிடப்பட்ட ராமர் படம் பொறித்த தபால்தலை

மீகாங் - கங்கா ஒத்துழைப்புத் திட்டம் (எம்.ஜி.சி.) என்பது ஆறு ஆசிய நாடுகளான இந்தியா, கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் சுற்றுலா, கலாச்சாரம், கல்வி, போக்குவரத்து, தகவல் தொடர்வு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்த எடுக்கப்பட்ட முன்னெடுப்பாகும்.

இது சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், விவசாயம், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், நீர்வள மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளையும் இணைத்து விரிவாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.