ஹரியாணா: கால்நடை தாக்கியதில் பெண் பலி

ஹரியாணாவில் தெரு மாடு தாக்கியதில் 65 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை பலியானார்.
(கோப்புப்படம்).
(கோப்புப்படம்).
Published on
Updated on
1 min read

ஹரியாணாவில் தெரு மாடு தாக்கியதில் 65 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை பலியானார்.

ஹரியாணா மாநிலம், படேல் நகரில் குர்ப்ரீத் கவுர்(65) தனது வீட்டின் நுழைவாயில் பகுதியை இன்று தூய்மைபடுத்திக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மாடு ஒன்று அவரை திடீரென தாக்கியது.

அதில் கவுர் விழுந்த பிறகும் அந்த மாடு அவரைத் தாக்கிக் கொண்டே இருந்தது. இருப்பினும் அருகிலிருந்த சிலர் அந்த மாட்டை விரட்ட முயன்றுள்ளனர்.

பின்னர் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com