இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டிய காதி, கைத்தறி வர்த்தகம்: பிரதமர் மோடி!

காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல்முறையாக ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :28 ஜூலை 2024, 10:18 am

DIN

காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல்முறையாக ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாகவும், அதிகரித்து வரும் காதி மற்றும் கைத்தறி விற்பனைகளால் புதிய வேலைவாய்ப்புகள் பெருகி வருவதாகவும் பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.

’மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரதமர் மோடி காதி பொருள்களை முன்னர் பயன்படுத்தாத பலரும் இப்போது பெருமையுடன் பயன்படுத்துவதாகக் கூறினார்.

”காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல்முறையாக ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. காதி வர்த்தகம் 400% உயர்ந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிகரித்து வரும் காதி மற்றும் கைத்தறி விற்பனைகளால் புதிய வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.

இந்தத் துறையில் தொடர்புடைய பெண்கள் இதனால் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.

உங்களிடம் நிறைய வகைகளில் துணிகள் இருக்கலாம். ஆனால், காதி துணிகள் இப்போது வரை இல்லையென்றால், இனி அதனை வாங்குங்கள்” என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ள நமது வீரர்கள் சர்வதேச அளவில் நம் தேசியக் கொடியை ஏற்ற மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், அனைவரும் அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என்றும் பிரதமர் பேசினார்.

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் சிறப்பாக பங்குபெற்று 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மாணவர்களுடன் மனதின் குரல் ஒலிபரப்பின்போது உரையாடிய பிரதமர் அவர்களைப் பாராட்டினார்.

மேலும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெற்ற அஸ்ஸாம் மாநிலத்தின் ’மொய்டாம்ஸ்’ குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.