ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி: உயிரிழந்த ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு -துணைநிலை ஆளுநர் உத்தரவு

News image
உயிரிழந்த மாணவன் நவின் டால்வினின் உடல் மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்லப்படும் காட்சி- படம் | பிடிஐ
Updated On :29 ஜூலை 2024, 3:39 pm

DIN

தில்லி கரோல் பாக் பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள தனியாா் ஐஏஎஸ் தோ்வு பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் கடந்த சனிக்கிழமை இரவு மழை-வெள்ளம் புகுந்ததில் மூன்று குடிமைப் பணி ஆா்வலா்கள் உயிரிழந்தனா்.

பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழை - வெள்ளம் புகுந்ததில் உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தை சோ்ந்த தன்யா சோனி (25), கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த நவின் டால்வின் (28) ஆகியோா் உயிரிழந்ததாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், புதுதில்லியில் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்க தில்லி துணைநிலை ஆளுநர் வி. கே. சாக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட விபத்தைத் தொடர்ந்து, தில்லி கரோல் பாக் பகுதியில் சட்டவிரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த 13 பயற்சி மையங்களுக்கு தில்லி மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் மரணத்துக்கு நீதி கோரி கரோல் பாக்கில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பயிற்சி மையத்தில் 3 தேர்வர்கள் உயிரிழந்த விவகாரத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் இன்று(ஜூலை 29) உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.