பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கட்டணத்தைக் குறைத்த ஜியோ நிறுவனம்!

ஜியோ பயனாளர்கள் குறைந்துவரும் நிலையில் நடவடிக்கை

News image
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
Updated On :29 ஜூலை 2024, 4:30 pm

DIN

ஏர்டெல் நிறுவனத்தைவிட கட்டணத்தைக் குறைத்தது ஜியோ நிறுவனம்.

ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தை 26 சதவிகிதம் வரையில் அண்மையில் உயர்த்தியிருந்தன.

இதனால், ஜியோ, ஏர்டெல் பயனாளர்கள் பலரும் பிஎஸ்என்எல் திட்டத்துடன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் கட்டணத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை முழுமையாக வழங்காததால், பயனாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறுவதற்கு யோசிக்கின்றனர்.

இதனையடுத்து, ஜியோவின் பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. அதனை ஈடுசெய்யும் விதமாக, ஜியோ தனது மாதாந்திர திட்டத்தின் கட்டணத்தை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதாவது, ஜியோ தனது பயனாளர்களுக்கு ரூ.189 திட்டத்தினை மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால், இந்த திட்டமானது ஏர்டெலில் ரூ.199ஆக உள்ளது. இந்த திட்டத்தில் அளவிலா அழைப்புகளும், தினமும் 100 இலவச குறுஞ்செய்திகளும் மற்றும் 2 ஜிபி டேட்டாவுடன் 4ஜி சேவையை வழங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.