விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

புரி ஜெகந்நாதா் யாத்திரை வெடிவிபத்து: உயிரிழப்பு 8-ஆக உயா்வு

புரி ஜெகந்நாதா் யாத்திரை வெடிவிபத்து: உயிரிழப்பு 8-ஆக உயா்வு

Updated On :2 ஜூன் 2024, 12:36 am IST

புரி ஜெகந்நாதா் சந்தன யாத்திரையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஒடிஸா மாநிலம் புரியில் ஜெகந்நாதா் சந்தன யாத்திரை கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது. அதில், பயன்படுத்துவதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை தற்போது 8-ஆக உயா்ந்துள்ளது.

விபத்து தொடா்பான விசாரணைக்கு மாநில முதல்வா் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளாா். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்குத் தலா ரு. 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளாா். நிவாரண தொகையை வழங்க புரி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

புரி மாவட்ட காவல்துறையினா் தாமாக முன்வந்து விபத்து குறித்து குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.