மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புரி ஜெகந்நாதா் யாத்திரை வெடிவிபத்து: உயிரிழப்பு 8-ஆக உயா்வு

புரி ஜெகந்நாதா் யாத்திரை வெடிவிபத்து: உயிரிழப்பு 8-ஆக உயா்வு

News image
Updated On :1 ஜூன் 2024, 7:06 pm

Din

புரி ஜெகந்நாதா் சந்தன யாத்திரையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஒடிஸா மாநிலம் புரியில் ஜெகந்நாதா் சந்தன யாத்திரை கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது. அதில், பயன்படுத்துவதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை தற்போது 8-ஆக உயா்ந்துள்ளது.

விபத்து தொடா்பான விசாரணைக்கு மாநில முதல்வா் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளாா். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்குத் தலா ரு. 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளாா். நிவாரண தொகையை வழங்க புரி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

புரி மாவட்ட காவல்துறையினா் தாமாக முன்வந்து விபத்து குறித்து குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.