காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குமரியில் மோடி செய்த தியானத்தால் சூரியன் சாந்தமடைவார்: பாஜக எம்.பி.

குமரியில் மோடி செய்த தியானத்தால் சூரியன் சாந்தமடைவார் என்றார் பாஜக எம்.பி.

News image
குமரியில் மோடி
Updated On :1 ஜூன் 2024, 12:52 pm

DIN

கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி 45 மணி நேரம் செய்த தியானத்தால், சூரிய பகவான் சாந்தடைவார், நாடு முழுவதும் காலநிலையில் மாற்றம் ஏற்படும், மக்கள், அதீத வெப்பத்திலிருந்து தப்பிப்பார்கள் என்று கோராப்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யும் பாஜக வேட்பாளருமான ரவி கிஷண் தெரிவித்துள்ளார்.

கோராக்பூரில் இன்று தனது வாக்கினை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரவி கிஷண் தெரிவித்திருக்கும் கருத்துகள் பலத்த விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், அவர் பேசிய விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

தொடர்ந்து ரவி கிஷண் பேசியிருப்பதாவது, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் 45 மணி நேரம் பிரதமர் மோடி மேற்கொண்ட தியானம் மற்றும் சூரிய வழிபாடு காரணமாக, சூரியன் சற்று சாந்தமடைவார், இனி நாடு முழுவதும் வெப்ப அலை குறையும். இதனால் மக்கள் அதீத வெப்பத்தாக்கத்திலிருந்து தப்பிப்பார்கள் என்றும், வெப்பத்தால் இனி மக்கள் உயிரிழக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

பாஜக வேட்பாளரும், எம்.பி.யுமான ரவி கிஷன் இவ்வாறு கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.