மக்களவைத் தோ்தலில் இறுதிக் கட்டமான ஏழாம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, அக் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) தலைவா் சரத் பவாா், சமஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவா் தேஜஸ்வி யாதவ், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல் பகவந்த் மான், ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பயி சோரன், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் மூத்த தலைவா் கல்பனா சோரன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா மற்றும் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) பிரதிநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.