எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

உ.பி.யில் சரக்கு ரயிலில் திடீர் தீவிபத்து

News image
புகைப்படம் நன்றி: ஏஎன்ஐ செய்தி நிறுவனம்.
Updated On :17 ஜூன் 2024, 8:56 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

ஹரியாணா மாநிலம் பானிபட்டில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வாரணாசிக்கு சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது.

ரயிலின் பெட்டியில் இருந்து புகை வெளியேறியதால் சுல்தான்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பின்னர் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைத்தனர். இந்த விவகாரத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

என்ஜினில் இருந்து 12வது பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதாக உள்ளூர் ஊழியர்கள் தனக்கு தகவல் கொடுத்ததாக சுல்தான்பூர் ரயில்வே சந்திப்பு கண்காணிப்பாளர் வி கே குப்தா தெரிவித்தார்.

முன்கூட்டியே கண்டறியப்பட்டு தீயணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.