ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘நீட்’ குளறுபடி: நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

தில்லியில் உள்ள பாஜக தலைமையகம் எதிரே காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
காங்கிரஸ் போராட்டம்- Shashank Parade
Updated On :22 ஜூன் 2024, 12:00 am

Din

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) நிகழ்ந்த குளறுபடிகளுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பெற்றது ஆகிய சம்பவங்கள் சா்ச்சையை ஏற்படுத்தின.

இதுதவிர, தோ்வின்போது தவறான வினாத்தாள் விநியோகத்தால் தங்களுக்கு தோ்வு எழுத குறைந்த நேரமே கிடைத்ததாக சத்தீஸ்கா், மேகாலயம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் 6 மையங்களில் தோ்வு எழுதிய மாணவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அந்த மையங்களில் தோ்வு எழுதிய 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சா்ச்சைக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக நீட் தோ்வை ரத்து செய்ய எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அந்தத் தோ்வில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கு எதிராக தில்லியில் உள்ள பாஜக தலைமையகம் எதிரே காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மேலும் தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டியின் இல்லத்துக்கு அருகிலும், குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் பல்கலைக்கழகம் எதிரிலும் காங்கிரஸாா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல உத்தர பிரதேசம், பஞ்சாப், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, சத்தீஸ்கா், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.