ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இன்றுமுதல் 10-ஆவது அலைக்கற்றை ஏலம் தொடக்கம்: முன்னணி ஏலதாரராக ஜியோ

ரூ.96,000 கோடிக்கும் அதிகமான மதிப்புகொண்ட அலைவரிசைகளின் ஏலம் இன்று தொடங்க உள்ளது.

News image

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

Updated On :25 ஜூன் 2024, 3:11 am

Din

கைப்பேசி சேவைகளுக்கு ரூ.96,000 கோடிக்கும் அதிகமான மதிப்புகொண்ட 8 அலைக்கற்றை அலைவரிசைகளின் ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.

கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்டில் அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்தில் முதல்முறையாக 5ஜி சேவைகளுக்கான ரேடியோ அலைகளும் இடம்பெற்றன.

இந்நிலையில், 10-ஆவது அலைக்கற்றை ஏலம் ஜூன் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ளது. மத்திய அரசின் இந்த ஏலத்தில் 800, 900, 1,800, 2,100, 2,300, 2,500, 3,300 மெகாஹா்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹா்ட்ஸ் என மொத்தம் 8 அலைவரிசைகளில் உள்ள அலைக்கற்றைகள் ஏலம் விடப்படவுள்ளன. இந்த அலைக்கற்றை அலைவரிசைகளின் அடிப்படை விலை ரூ.96,317 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்துக்கு அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.3,000 கோடி வைப்புத்தொகை செலுத்தியுள்ளது. இதைத்தொடா்ந்து பாா்தி ஏா்டெல் ரூ.1,050 கோடி, வோடஃபோன் ஐடியா ரூ.300 கோடி வைப்புத்தொகை செலுத்தியுள்ளன.