தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாஜக மக்களவைத் தலைவருக்கு ஆதரவு! ஆனால்..: ராகுல் நிபந்தனை!

இந்தியா கூட்டணிக்கு மக்களவைத் துணைத் தலைவர் பதவி வழங்க வலியுறுத்தியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

News image

ராகுல் காந்தி

Updated On :25 ஜூன் 2024, 5:57 am

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்களவைத் தலைவருக்கு ஆதரவு அளிப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆனால், மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்க அவரிடன் கேட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்ததில்லை என்ற வரலாறு இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணித் தரப்பில் இம்முறை வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், வரலாற்றை தொடரவும், மக்களவைத் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு ராஜ்நாத் சிங் ஆதரவு கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த ராகுல் காந்தி, பாஜகவின் மக்களவைத் தலைவர் வேட்பாளருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிப்பதாக கோரியுள்ளார்.

மேலும், மக்களவைத் துணைத் தலைவர் பதவியை ராஜ்நாத் சிங்கிடம் கார்கே கேட்டிருந்தார். அதற்கு மீண்டும் அழைப்பதாக கூறிய ராஜ்நாத் இன்னும் அழைக்கவில்லை. எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் மோடி ஒத்துழைப்பு கேட்கிறார், ஆனால் எங்கள் தலைவர் அவமானப்படுத்தப்படுகிறார் என்று ராகுல் தெரிவித்தார்.

மத்தியில் தனிப் பெரும்பான்மை பெறாததால், பாஜக தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில், மீண்டும் மக்களவைத் தலைவராக பாஜக எம்பி ஓம் பிர்லாவை தேர்வு செய்ய பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர்.

ஆனால், மக்களவைத் துணைத் தலைவர் பதவியை தங்களுக்கு ஒதுக்குமாறு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியா கூட்டணியும் மக்களவைத் தலைவருக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதுடன், துணைத் தலைவர் பதவியை கோரியுள்ளது.

இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மக்களவைத் தலைவர் பதவிக்கு ஓம் பிர்லா விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.