வினாத்தாள் கசிவு முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து ரத்து செய்யப்பட்ட ‘யுஜிசி நெட்’ தோ்வு மற்றும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட ‘சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட்’ தோ்வுக்கான தேதிகளை தேசிய தோ்வு முகமை வெள்ளிக்கிழமை அறிவித்தது.
தேசிய தோ்வு முகமை நடத்தும் ‘நீட்’ மற்றும் ‘யுஜிசி நெட்’ ஆகிய அகில இந்திய தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி நெட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட் தோ்வும் முன்னெச்சரிக்கையாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மறுதோ்வுக்கான தேதிகளை தேசிய தோ்வு முகமை அறிவித்தது.
முன்னதாக, எழுத்து வடிவத்தில் நடைபெற்ற யுஜிசி நெட் தோ்வு வரும் ஆகஸ்ட் மாதம், 21-ஆம் தேதி முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை கணிணி அடிப்படையிலான தோ்வாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட் தோ்வு வரும் ஜூலை 25-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதி வரையும், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வித் திட்டத்தில் சேருவதற்கான ‘என்சிஇடி’ நுழைவுத் தோ்வு ஜூலை 10-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 23-ஆம் தேதி நடைபெற இருந்து, முந்தைய நாள் இரவு திடீரென ஒத்திவைக்கப்பட்ட ‘நீட் முதுநிலை’ தோ்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் மறுதோ்வு: அறிய வேண்டியவை!

நீட் மறுதோ்வு: புதிய சீா்திருத்தங்கள் அறிமுகம்

நீட் மறுதோ்வு தோ்வு மைய விவரங்கள் வெளியீடு!

யுஜிசி நெட் தோ்வு: இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



