கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பு தலைவர் எம்.எம்.ஹாசன், மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் தேதியை வேறு தேதிக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கேரளத்தில் ஏப்ரல் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இது குறித்து எம்.எம்.ஹாசன் “தேர்தல் நடைபெறும் வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட பிரிவினருக்கு வாக்கு செலுத்த வருவதில் சிரமம் இருப்பதைக் கவனத்தில்கொண்டு தேர்தல் தேதியை மாற்ற கேட்டுக்கொண்டுள்ளேன். கேரளத்தில் வெள்ளிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மக்களுக்கு வாக்குப் பதிவிட சிரமமான நாள்கள். ஆகவே வேறு ஒரு நாளில் தேர்தல் தேதியை மாற்றுமாறு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதியில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.