கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொருந்தா உணவு சாப்பிட்டதைக் கண்டித்த தந்தை: மகள் எடுத்த விபரீத முடிவு

பொருந்தா உணவுகளை சாப்பிடுவதைக் கண்டித்த பெற்றோருக்கு மகள் கொடுத்த அதிர்ச்சி..

News image
Updated On :19 மார்ச் 2024, 12:53 pm

DIN

மகாராஷ்டிரத்தின், நாக்பூரில் பொருந்தா உணவுகளை(ஜங் ஃபுட்) சாப்பிட்ட மகளைக் கண்டித்ததால் மனமுடைந்து மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரின் சிந்தி காலனி பகுதியில் வசிப்பவர் பூமிகா வினோத் தன்வானி(19). இவர் இளங்கலை படித்து வந்தார்.

பூமிகாவுக்கு தைராய்டு பிரச்னை இருந்துள்ளது. இந்த நிலையில், பொருந்தா உணவு(ஜங்க் ஃபுட்) சாப்பிடும் பழக்கமுள்ள அவரை தன் தந்தை சாப்பிடக்கூடாது எனக் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பூமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து, இன்று காலை பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.