ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

பள்ளி தேர்வுகள் விரைவில் ஆரம்பம்; 19,573 மாணவர்கள் பங்கேற்பு

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2024, 5:14 pm

DIN

பனாஜி: கோவா கல்வி வாரியத்தின் மேல்நிலைப் பள்ளி தேர்வுகள் (10 ஆம் வகுப்பு) ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே வேளையில் தேர்வுகள் ஏப்ரல் 24ஆம் தேதி உடன் முடிவடையும் என்று கோவா இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் (ஜிபிஎஸ்எச்எஸ்இ) செயலாளர் வித்யாதத்தா நாயக் தெரிவித்தார்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுகள் மாநிலம் முழுவதும் 31 மையங்களில் நடைபெறும், அவற்றில் 9,757 மாணவர்கள், 9,816 மாணவிகள் என மொத்தம் 19,573 மாணவர்கள் தேர்வு எழுதுவர்.

கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் 20,476 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.