மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

பிரதமர் மோடி பேசுவது பேசுவது உண்மைக்கும் யதார்த்தத்திற்கும் புறம்பானதாகவே இருக்கும் என சரத் பவார் விமர்சித்துள்ளார்.

News image
தேசியவாத கங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார்
Updated On :2 மே 2024, 6:52 am

DIN

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தேசியவாத கங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை, “அவர் பேசுவது உண்மைக்கும் யதார்த்தத்திற்கும் புறம்பானதாகவே இருக்கும்” என்று விமர்சித்துள்ளார்.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில்,10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சரத் பவார், “பிரதமர் மோடி எப்போதும் மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்துப் பேசாமல் அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறார். உண்மைக்குப் புறம்பாக மட்டுமே பேசும் ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை. அவர் என்னையும் உத்தவ் தாக்கரேவையும் தாக்கிப் பேசுவதிலேயே குறியாகவுள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இவர்கள் ஏன் மகாராஷ்டிராவிற்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்துகிறார்கள் என்றால், அப்போதுதான் மோடி அதிக முறை இங்கு வந்து வாக்கு கேட்க முடியும்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டுவருவார்கள் என்று மோடி அடிக்கடி பேசி வருவது சமூகப் பதற்றத்தை உருவாக்கத்தான். எங்கள் கூட்டணி அவ்வாறு கூறவில்லை. மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாத வாரிசுரிமை வரி மற்றும் சொத்து மறுபங்கீடு குறித்தும் பொய்களைப் பரப்பி வருகிறார்” எனக் கூறினார்.

பிரதமர் மோடி மகாராஷ்டிரா தேர்தல் பரப்புரையின்போது சரத் பவாரை தாக்கிப் பேசுகையில் “மகாராஷ்டிராவில் ஒரு அலைந்து திரியும் ஆத்மா ஒன்று உள்ளது. அது, தான் வெற்றிபெறவில்லையெனில் மற்றவர்களின் நற்காரியங்களைக் கெடுத்துவிடும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.