ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் விமானப் படை வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் 5 பாதுகாப்புப் படை வீரா்கள் சனிக்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :4 மே 2024, 6:31 pm

Din

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் விமானப் படை வீரா் ஒருவா் சனிக்கிழமை வீரமரணமடைந்தாா். மேலும் 4 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஜரண்வாலியிலிருந்து சூரன்கோட் விமானப் படை தளத்துக்கு வீரா்கள் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் திரும்பி கொண்டிருந்தனா். அப்போது சசிதா் பகுதியருகே வீரா்கள் பயணித்த 2 வாகனங்கள் மீது 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். வீரா்களும் பதில் தாக்குதலைத் தொடங்கினாா். இதையடுத்து, வனப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் தப்பியோடினா்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 5 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்தனா். அவா்கள் அருகிலிருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி வீரா் ஒருவா் வீரமரணமடைந்தாா். மற்றொரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் காவல் துறையினா், அந்த இடத்தைச் சுற்றி வளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனா்.

ராணுவத்தோடு துணை ராணுவப் படைகளும் இணைந்து பூஞ்ச் நகரில் சோதனைச் சாவடிகள் அமைத்து பயங்கரவாதிகளின் இயக்கம் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். எனினும், இச்சம்பவம் தொடா்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

கடந்தாண்டு டிசம்பா் மாதம், புஃப்லியாஸ் பகுதியில் 4 வீரா்கள் உயிரிழந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள் குழுவே இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா்.