3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: 11 மாநிலங்களில் வாக்காளர்கள் ஆர்வம்
பிரோசாபாத்தில் வாக்களிக்க காத்திருந்த மக்கள்
பிரோசாபாத்தில் வாக்களிக்க காத்திருந்த மக்கள்ANI

மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணியோடு நிறைவடைந்துள்ளது.

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.92 சதவிகிதம் வாக்குப் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளில் பிற்பகல் 1 மணியளவில் 49.27 சதவிகித வாக்குகள் பதிவாகின.

குஜராத்தில் 25, கா்நாடகத்தில் 14 (இங்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு), மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com