ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ரயில் மோதி யானை உயிரிழப்பு: ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

ரயில் மோதி யானை உயிரிழப்பு: ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :7 மே 2024, 9:05 pm

Din

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே திங்கள்கிழமை இரவு ரயில் மோதி பெண் யானை உயிரிழந்தது. இது தொடா்பாக ரயில் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இப்பகுதியில் ரயில் மோதி யானை உயிரிழப்பது கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது நிகழ்வாகும்.

இது தொடா்பாக மாநில வனத்துறை அமைச்சா் ஏ.கே.சசீதரன் கூறியதாவது:

பாலக்காடு அருகே உள்ள வனப் பகுதியில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட ரயில் வேகமாகச் சென்றுள்ளது. யானை ரயிலில் சிக்கி உயிரிழக்க முக்கியக் காரணமாக ரயிலின் வேகம் இருந்துள்ளது. எனவே, ரயில் என்ஜின் ஓட்டுநா் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘திருவனந்தபுரம்-சென்னை மெயில் தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண் யானை மீது இடித்து அதனை கீழே தள்ளியது. இதில் காயமடைந்த யானை சுமாா் அரை மணி நேரம் காயத்துடன் போராடி உயிரை விட்டுள்ளது. அந்தப் பகுதியில் ரயில்களை 45 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்கக் கூடாது என்ற விதி உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் வகுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநா் அதனை மீறி கூடுதல் வேகத்தில் ரயிலை இயக்கியுள்ளாா்.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி இதே பகுதியில் ரயில் மோதி யானை உயிரிழந்த சம்பவம் நிழ்ந்தது. அப்போது காயமடைந்த யானைக்கு ஒரு சில நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அது பலனளிக்கவில்லை. இந்த பகுதியில் அடிக்கடி யானைகள் ரயிலில் அடிபடுவதால் தண்டவாளத்தை யானைகள் நெருங்காத வகையில் பாதுகாப்பு வலை அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது’ என்றாா்.