கடும் வெப்பநிலைக்கும் தண்ணீர் பஞ்சத்துக்கும் விடிவு பிறக்கும் வகையில் பெங்களூருவில் 48 மணி நேரமாக கனமழை பெய்துவருகிறது.
கடந்த சில மாதங்களாகவே பெங்களூரு.. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தன. மாநில அரசு, நீர் பகிர்மானத்தில் கடும் விதிமுறைகளைப் பின்பற்றியது.
நகரின் பாதிக்கு மேலான இடங்களில் ஆழ்துளைக்கிணறுகள் வறண்டன. 41 ஆண்டுகளாக இல்லாதளவில் வறட்சியை பெங்களூரு சந்தித்தது.
வியாழக்கிழமை இரவு பெய்த மழையில், மின்னல் மற்றும் இடி காரணமாக 70 மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் 171 இடங்களில் மரங்களின் கிளைகள் உடைந்து விழுந்ததாகவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மின்கம்பத்தின் மீது மரம் விழுந்த சம்பவத்தில், வடக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பம் சிறு இழையில் உயிர் தப்பியது.
இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!
ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: பெங்களூரு நபா் கைது

பொன்னமராவதி நகரில் இன்று மின்நிறுத்தம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணிநேரம் காத்திருப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


