வாரணாசி: வாராணசி தொகுதியில் பிரதமர நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்வது, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று வர்ணித்திருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நாட்டுக்கு அவர் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம். மிகவும் புனிதமான நகரம். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்கவிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் மிகச் சிறப்பான பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்த நாட்டுக்கு அவர் தேவை. உலகளவில் இந்தியா மிகப்பெரிய பங்காற்றவிருக்கிறது என்றார்.
கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் நிலைத்தன்மையை பிரதமர் மோடி உறுதி செய்திருக்கிறார். அவருடன் இணைந்திருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெறும். அதனை நான் உறுதியோடு சொல்கிறேன். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியே நடைபெறும். ஆந்திரத்தில் ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியே அனைத்துத் தொகுதிகளிலும் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.