பொருளாதார மண்டலத்தில் தமிழகம் முதலிடம்!: டி.பி. வேர்ல்ட்


புதுதில்லி: இந்தியாவிலேயே அதிக தொழில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று உலகளாவிய தளவாட நிறுவனமான டி.பி. வேர்ல்டு தெரிவித்துள்ளது.
சென்னையில் டி.பி. வேர்ல்ட் அதன் மிகப்பெரிய வர்த்தக கிடங்கு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் இரண்டாவது மிக பெரிய வர்த்தக கிடங்கு மண்டலம் சென்னையில் அமையப்பெற்றுள்ளது. அதே வேளையில் தெற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் கடல் வழியாக சென்னை இணைக்கப்பட்டுள்ளதால் பல நன்மைகளும் இதில் உள்ளது என்று டிபி வேர்ல்ட் துணைத் தலைவர் ரஞ்சித் ரே தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே பொருளாதார மண்டலம் அமைக்க உகந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. சுமார் 6 லட்சம் சதுர அடியில் சென்னை பொருளாதார மண்டலம் பரவியுள்ளது. இது 2 மில்லியன் சதுர அடியாக வளரும் திறன் கொண்டது. கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது.
டிபி வேர்ல்டின் ஒருங்கிணைந்த சென்னை வணிக பூங்காவானது, பொருளாதார மண்டலமான காட்டுப்பள்ளி, எண்ணூர் மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களிருந்து சுமார் 40 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளது. தற்போது இந்தியாவில், டி.பி. வேர்ல்டிற்கு மூன்று பொருளாதார மண்டலங்கள் உள்ளது. சென்னையில் 125 ஏக்கரும், இரண்டாவதாக மும்பை ஜே.என்.பி.ஏ.வில் 85 ஏக்கரும், கொச்சியில் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள புதிய பொருளாதார மண்டலமானது ஆட்டோ, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சுகாதாரம், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் உள்ளிட்ட பல துறைகளுக்கு இது பிரத்தியேகமாக அடித்தளத்தை இது வழங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...