சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா-வங்கதேச எல்லையில் ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

இந்தியா-வங்கதேச எல்லையில் ரூ.12 கோடி மதிப்புள்ள 89 தங்கக் கட்டிகளுடன் கடத்தல்காரரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

News image
கைப்பற்றப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள்.- (ஏஎன்ஐ)
Updated On :26 மே 2024, 9:41 am

DIN

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் இந்தியா-வங்கதேச எல்லையில் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள 89 தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலின் 6 ஆவது கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 25) நடைபெற்றது. தெற்கு வங்க எல்லைக்கு உள்பட்ட ஆயுதப்படை எல்லைப் புறக்காவல் நிலையத்தின் குனர்மத் பகுதியில் உள்ள ஹல்தர்பாடா கிராமத்தில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அலோக் பால்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.) என்பவரின் வீட்டில் இருந்து வெவ்வேறு அளவுகளில் 89 தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். அவர் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு இந்த தங்கத்தை கடத்திவந்து, அதை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 16.067 கிலோ என்றும், சந்தை மதிப்பு ரூ.12 கோடி என்றும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தெற்கு வங்க எல்லைப் பகுதியின் காவல்துறை துணை ஆணையர் ஏ.கே.ஆர்யா கூறுகையில், “மே 25 ஆம் தேதி எல்லைக் கிராமமான ஹல்தர்பாடாவில் உள்ள ஒரு வீட்டில் தங்கக் கட்டிகள் இருப்பதாக எல்லைப் புறக்காவல் காவல் படை வீரர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்தில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, அந்த வீட்டை சோதனையிட்டதில், அலோக் பால் என்பவர் சிக்கினார்” என்றார்.

 எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்

எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்

விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட அலோக் பால் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த தங்கக் கடத்தல்காரருடன் தொடர்பு கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார். தனது தங்கத்தை வீட்டில் மறைத்து வைக்க தினமும் ரூ.400 தருவதாக கடத்தல்காரன் கூறியதற்கு சம்மதித்து இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார். அதே கடத்தல்காரன் தனது வீட்டிற்கு சனிக்கிழமை அன்று, மதியம் வெவ்வேறு அளவிளான 89 தங்கக் கட்டிகளை வீட்டில் மறைத்து வைக்க கொடுத்தாகவும், தான் ஏற்கனவே தங்கக் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஒரு மாத காலம் சிறையில் இருந்ததாகவும் அலோக் பால் கூறியுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள் வருவாய்ப் புலனாய்வு இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.