
பிரதமர் நரேந்திர மோடி காந்தியை குறித்து தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார்.
இது குறித்து “காந்தியை பற்றி தெரிந்துகொள்ள படம் பார்க்க வேண்டும் என முழுமையான அரசியல் படித்த மாணவருக்கு மட்டுமே தோன்றும்” என அவர் பதிவிட்டுள்ளார்.
மோடி முழுமையான அரசியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “1982 வரை காந்தி அறியப்படவில்லை என நம்பும் பிரதமர் எந்த உலகத்தில் வாழ்கிறார் எனத் தெரியவில்லை. காந்தியின் புகழை யாராவது அழிக்கிறார்கள் என்றால், அது பிரதமர் மோடியாகத்தான் இருக்க முடியும். வாரணாசி, தில்லி மற்றும் அகமதாபாத்தில் உள்ள காந்திய நிறுவனங்களை அழித்தது அவர்களது அரசுதான்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதான் ஆர்எஸ்எஸின் முத்திரை எனவும் அவர்களால் ஒருபோதும் காந்தியின் தேசியத்தை புரிந்து கொள்ள முடியாது எனவும் அவர்களின் சித்தாந்தம் உருவாக்கிய சூழலே நாதுராம் கோட்சேவை காந்தியை கொல்ல வைத்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.