நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் மூலம் 4.50 லட்சம் போ் பயன் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராகும் வகையில் மத்திய அரசு இலவச பயிற்சி வகுப்புகளை இணையவழியே நடத்தி வருகிறது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இதற்கென தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘சதீ’ என்ற பெயரில் அந்த இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து பயிற்சி வாயிலாக பயனடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமன்றி, க்யூட் நுழைவுத் தோ்வு, எஸ்எஸ்சி, வங்கி, ஐசிஏஆா் போன்ற தோ்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, இணையதளத்தில் குறிப்பிட்ட தோ்வுக்கு முன்பதிவு செய்து, இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க் கடன் தள்ளுபடியால் 14.43 லட்சம் விவசாயிகள் பயன்

நீட் தோ்வு தனியாா் பயிற்சி மையங்களை உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்: தில்லியில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேட்டி

ரூ. 5 லட்சம் கொடுத்து நீட் வினாத்தாளை வாங்கிய பயிற்சி மைய உரிமையாளா்: சிபிஐ தகவல்

நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனை
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



