தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

எங்காவது ஓரிடத்தில் நிறுத்தத்தானே வேண்டும்: ஓய்வு குறித்து சரத் பவார் சூசகம்!

எங்காவது ஓரிடத்தில் நிறுத்தப்படத்தானே வேண்டும் என்று தனது ஓய்வு குறித்து சரத் பவார் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

News image

சரத் பவார் - Center-Center-Delhi

Updated On :5 நவம்பர் 2024, 3:30 pm IST

புது தில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் (83) தனது ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சரத் பவாரின் பதவிக் காலம் இன்னும் 18 மாதங்களில் நிறைவடையும் நிலையில், அதன்பிறகு தான் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் முதுபெரும் தலைவர் என்று புகழப்படும் சரத் பவார், கடந்த 1999ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். தற்போது மகாராஷ்டிரத்தில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில் பவார் - பவார் இடையேதான் போட்டி என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சரத் பவார் தனது ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்துள்ளார், அதில், நான் தற்போது ஆட்சியில் இல்லை. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவடையவிருக்கிறது. எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் நான் போட்டியிடப்போவதில்லை. நான் எங்கேனும் ஒரு இடத்தில் நிறுத்தித்தானே ஆக வேண்டும் என்று கூறியிருக்கும் முதுபெரும் தலைவர், என்னை நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினராக்கிய பாரமதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் உத்தவ் தரப்பின் சிவசேனை அணியுடன் இணைந்து போட்டியிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.