ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாசல் காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு- மல்லிகாா்ஜுன காா்கே அதிரடி நடவடிக்கை

காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேசத்தில் அக்கட்சியின் மாநிலக் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டது.

News image
மல்லிகாா்ஜுன காா்கே- கோப்புப் படம்
Updated On :6 நவம்பர் 2024, 7:59 pm

Din

காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேசத்தில் அக்கட்சியின் மாநிலக் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டது.

அத்துடன், காங்கிரஸின் மாவட்ட மற்றும் வட்டாரக் குழுக்களையும் கலைத்து, கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக சுக்விந்தா் சிங் சுக்கு பதவி வகித்து வருகிறாா். கட்சியின் மாநிலத் தலைவராக மறைந்த முன்னாள் முதல்வா் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் உள்ளாா்.

கடந்த 2022-இல் இப்பதவியை ஏற்ற இவா், காங்கிரஸ் செயற்குழுவிலும் இடம்பெற்றுள்ளாா்.

இந்தச் சூழலில், உள்கட்சி பூசல்களால் ஹிமாசல பிரதேச காங்கிரஸ் பெரும் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மகாஜனுக்கு வாக்களித்தனா். இதனால், காங்கிரஸ் வேட்பாளா் அபிஷேக் சிங்வி தோல்வியடைந்தாா்.

இந்நிலையில், ‘மாநில காங்கிரஸ் கமிட்டி, மாவட்ட மற்றும் வட்டாரக் குழுக்களை ஒட்டுமொத்தமாக கலைக்கும் முன்மொழிவுக்கு கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஒப்புதல் அளித்துள்ளாா்; இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஹிமாசல பிரதேச காங்கிரஸை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் புதிய மாநிலத் தலைவா் பதவிக்கு மாநில அமைச்சா்கள் அனிருத் சிங், ஹா்ஷ்வா்தன் செளஹான் உள்ளிட்டோரின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.