
ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது.
முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஜாா்க்கண்டில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் இன்றும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பா் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 2.60 கோடி. முதல்கட்ட தோ்தலில் 1.37 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். மொத்தம் 15,344 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்கட்ட தோ்தலில், மொத்தம் 683 வேட்பாளா்கள் (ஆண்கள் 609, பெண்கள் 73, மூன்றாம் பாலினத்தவா் ஒருவா்) களத்தில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.