உ.பி. இடைத்தேர்தலில் 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும்: அகிலேஷ் யாதவ்

உ.பி.யில் இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்.
சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்.கோப்புப்படம்.
Updated on
1 min read

உ.பி.யில் இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஜெய்ப்பூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தேர்தலுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் எப்போதும் துல்லியமாக இருக்காது. பொதுமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் பாஜக 9 தொகுதிகளையும் இழக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

டிஜிட்டல் கைது மோசடி: 17,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே உ.பி.யில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com